மேலும்

திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்

India-emblemதிருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்காவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக பேச்சாளர் ஒருவர், அத்தகைய பேச்சுக்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வம் இருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *