மேலும்

மாதம்: October 2016

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ஜப்பானிய போர்க்கப்பல்கள்

ஜப்பானியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடல் தற்காப்புப் படையின் போர்க்கப்பல்களான, கஷிமா, செடோயுகி, அசாகிரி ஆகியனவே கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.

தாய்லாந்து சென்றார் சிறிலங்கா அதிபர்

ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சென்றடைந்தார்.

சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக நிமால் லெகே

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஆலோசகராக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி நிமால் லெகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மீளமுடியா கடன் பொறிக்குள் சிறிலங்கா

சிறிலங்கா தனது பொருளாதார முக்கியத்துவத்தை அதிகரிப்பதற்காக தனது நாட்டில் கட்டுமான அபிவிருத்திகளை முன்னெடுக்க முயல்வதானது அதனை கடன் பொறிக்குள் தள்ளுவதுடன், வங்குரோத்து நிலையை அடைவதற்கும் அனைத்துலக நாணய நிதியத்திடம் மேலும் கடன் கோருவதற்கும் வழிவகுக்கிறது.

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கிறது இந்தியா

நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் பீப்பாய் சுத்திகரிக்கும் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திருகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் நிறுவவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் எரிபொருள் கேந்திரங்களைக் குறிவைக்கும் இந்தியா

திருகோணமலையை பிராந்திய எரிபொருள் கேந்திரமாக மாற்றுவதற்கும், சிறிலங்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை நிறுவுவதற்கும் இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது.

விக்கியின் குற்றச்சாட்டு – விசாரணை நடத்தக் கோருவது குறித்து கூட்டமைப்பு ஆலோசனை

தன்னைக் கொலை செய்வதற்கு சிறிலங்காவின் தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, காவல்துறை விசாரணைகளை நடத்துமாறு சிறிலங்கா அதிபரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது – நரேந்திர மோடி

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் இராஜதந்திர எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்தப் பிணைப்பு, இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு எதிரான இரகசிய நடவடிக்கை – இராணுவத்துக்கு தெரியாதாம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்த இரகசிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாது என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ரணிலைச் சந்திக்க வெளியே வந்தார் சோனியா காந்தி

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை, சிறிலங்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.