மேலும்

மாதம்: October 2016

சிறிலங்காவில் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் – மங்களவைச் சந்தித்தார்

பத்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்களை அம்பலப்படுத்தும் முன்னாள் கடற்படை அதிகாரி

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர்.

கடலுக்கு அடியிலான இணைப்பு மூலம் சிறிலங்காவுக்கு மின்சாரம் – இந்தியா ஆலோசனை

சிறிலங்காவுக்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் வகையில் கடலுக்கு அடியில் மின்சார பரிமாற்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்தியாவின் மின்சக்தி அமைச்சின் செயலர் பி.கே.புஜாரி தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் மருந்துப் பொருட்கள் உற்பத்தி துறையில் ரஸ்யா, இந்தியா முதலீடு

இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிலங்காவில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நிறுவவுள்ளன. 10 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த இரண்டு திட்டங்களிலும், ரஸ்யா மற்றும் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்யவுள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் ‘புதிய கோப்பையில் பழைய மது’ –கூட்டமைப்பு கண்டனம்

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை புதிய கோப்பையில் பழைய மது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.

அடுத்த ஆண்டிலும் பாதுகாப்புக்கே அதிக நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சுக்கு பெரும் வெட்டு

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த மாதம் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கின் வீதி வலையமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா உதவி

வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்துடன் இரட்டை நகராகிறது பிரித்தானியாவின் கிங்ஸ்டன்

பிரித்தானியாவின் கிங்ஸ்டன் நகரத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் இரட்டை நகரங்களாக பிரகடனம் செய்யும் புரிந்துணர்வு உடன்பாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையெழுத்திடவுள்ளார்.

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ள கோத்தா

சீனாவில் நடக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அங்கு, 25 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் விக்னேஸ்வரன் தலையிட முடியாது- ரணில்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட எந்த முதலமைச்சராலும், தலையீடு செய்ய முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.