மேலும்

ஊடகங்களுக்கு எதிரான இரகசிய நடவடிக்கை – இராணுவத்துக்கு தெரியாதாம்

Brig. Roshan Seniviratneமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்த இரகசிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்துக்குத் தெரியாது என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு எதிராக இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சிறிலங்கா இராணுவத்துக்குள் இரகசியப் பிரிவு ஒன்றை மகிந்த ராஜபக்ச பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, தான் அதுபற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரிகேடியர் செனிவிரத்ன பதிலளித்தார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றாக மாறிவிட்டது. எனவே, இதற்கான பதில்களை நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும்” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *