மேலும்

மாதம்: June 2016

கொத்தணிக் குண்டுகள் குற்றச்சாட்டு – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நழுவலான பதில்

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா படையினரால் கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருத்து வெளியிட மறுத்துள்ளார்.

அகதிகள் படகைத் திருத்த வாய்ப்பில்லை – மாற்றுவழியை நாடும் இந்தோனேசியா

இந்தோனேசியாவில் தங்கியுள்ள 44 இலங்கை தமிழ் அகதிகளுக்கும், தேவையான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்குமாறு,  சிறிலங்கா மற்றும், இந்தியத் தூதரகங்களிடம் இந்தோனேசிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 4500 படையினர் சட்டபூர்வமாக விலகல்

பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில், முப்படைகளிலும் இருந்து தப்பியோடிய சுமார் 4500 பேர் சட்டபூர்வமாக படைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களை ‘நோட்டம்’ விட்டார் அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும், தூதரக அதிகாரிகள் குழுவொன்று, இரண்டு நாள் பயணமாக அம்பாந்தோட்டை சென்று, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களைப் பார்வையிட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காத உள்ளக விசாரணையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ரஞ்சன் ராமநாயக்க – மகிந்தானந்த கைகலப்பு

சிறிலங்காவின் பிரதி்அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேக்கும் இடையில் நாடாளுமன்ற அவைக்கு வெளியே நேற்று கைகலப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அமெரிக்க நுழைவிசைவு மறுப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கப்பலில் வரும் திருவள்ளுவர் சிலைகளை பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் நிறுவ ஏற்பாடு

சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்படும் 16 திருவள்ளுவர் சிலைகள், இலங்கையில் உள்ள 13 பாடசாலைகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் நிறுவப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் படகை கடலுக்குள் தள்ளும் இந்தோனேசியாவின் முயற்சி மீண்டும் தோல்வி

இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள, இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் ஆழ்கடலுக்குள் தள்ளிச் செல்வதற்கு நேற்றுக்காலை முன்னெடுக்கப்பட்ட முயற்சி மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

லசந்த, பிரகீத் கொலைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் மாயம் – சிறிலங்கா இராணுவம் கைவிரிப்பு

ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன சம்பவம் தொடர்பான ஆவணங்கள் காணாமற்போயிருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.