கொழும்பில் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாடினார் மைத்திரி
சிங்கள-தமிழ்ப் புத்தாண்டை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பு -7இல் அமைந்துள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடினார்.
சிங்கள-தமிழ் புத்தாண்டு, நேற்றுமாலை பிறந்ததை முன்னிட்டு, மஹாகம சேகர மாவத்தையில் (பஜட் வீதி) உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பால்சோறு பொங்கி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
புத்தாண்டை முன்னிட்டு அவர் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார். இந்த நிகழ்வில், மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தினர் மாத்திரமே பங்கேற்றிருந்தனர்.