மேலும்

சிறிலங்காவின் கடந்த ஆண்டு சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கும் – ஜோன் கெரி

john-kerry-welcomeசிறிலங்காவில் கடந்த ஆண்டின் சாதனைகள் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“அதிபர் ஒபாமா மற்றும் அமெரிக்க மக்களின் சார்பாக, சிறிலங்கா புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் நான் இணைந்து கொள்கிறேன்.

வரலாற்றில் நிலைத்திருக்கும் சிறிலங்காவின் கடந்த ஆண்டு சாதனைகள், நல்லிணக்கம், அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றில், ஆழமான கடப்பாட்டை நிரூபித்துள்ளது.

புத்தாண்டில் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வெற்றிகரமாக முன்நோக்கி நகரவும், சிறிலங்காவில் ஜனநாயகம் மற்றும் செழிப்பை மேலும் வலுப்படுத்தவும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *