சம்பூர் அனல் மின்திட்டம் குறித்து இந்தியாவுடன் பேசுவேன் – இரா.சம்பந்தன்
சம்பூரில் 500 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியா நிறுவுவதால், ஏற்படக் கூடிய சுற்றாடல் பாதிப்புகள் தொடர்பாக இந்தியத் தூதரகத்துடன் தாம் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
”அனல் மின் நிலையத்தினால் சுற்றாடல் பாதிப்பு, மற்றும் சூழல் மாசு ஏற்படும் என்று அஞ்சும் அப்பகுதி மக்கள், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று என்னைக் குற்றம்சாட்டுகின்றனர்.
அனல்மின் நிலையம் அமைப்பதை விட சூரிய மின்சக்தி திட்டம் ஒன்றை நிறுவுவது பொருத்தம் என்று என் மனதில் உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பூரில் இந்தியாவின் தேசிய அனல்மின் கழகம், சிறிலங்காவின் மின்சாரசபையுடன் இணைந்து 500 மெகாவாட் அனல்மின் நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.