பாரீசில் சிறப்புற நடந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு (ஒளிப்படங்கள்)
ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், சமூக அக்கறையாளரும், புதினப்பலகை நிறுவக ஆசிரியருமான மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோபர் பிரான்சிஸ்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் 4 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில், கி.பி. அரவிந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு மலர் வெளியிடப்பட்டது.
அத்துடன் ஆய்வாளர் பி.ஏ.காதர், செழுங்கலைப் புலவர் குமரன், கலைஞரும் எழுத்தாளருமான நாச்சிமார் கோவிலடி ராஜன், பத்திரிகையாளரும், படைப்பாளியுமான குணா கவியழகன், ஊடகவியலாளரும், தமிழ்-3 வானொலி நெறியாளருமான றூபன் சிவராசா, முன்னைநாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார் ஆகியோரின் நினைவுரைகளும், நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில், கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
ஒளிப்படங்கள் – றூபன் சிவராஜா