மேலும்

சீனாவிடம் 1 பில்லியன் டொலரை கடனாக வாங்குகிறது சிறிலங்கா

Srilanka-chinaஒரு பில்லியன் டொலர் பெறுமதியான நாணய கைமாற்று உடன்பாடு ஒன்றை சீனாவுடன் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றி்ய அவர், ‘வெளிநாட்டு நாணய கையிருப்பு தொடர்பாக நாம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஏற்கனவே இந்தியாவிடம் இருந்து நாணயக் கைமாற்றைப் பெற்றிருக்கிறோம். இப்போது மேலும் ஒரு பில்லியன் டொலர் நாணயக் கைமாற்று உடன்பாட்டை சீன மத்திய வங்கியுடன் செய்து கொள்ளவிருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதம் இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 700 மில்லியன் டொலர் நாணயக் கைமாற்றை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *