கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு
சிறிலங்காவின் கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசெல்சில் உள்ள அனைத்துலக விமான நிலையத்திலும், மெட்ரோ தொடருந்து நிலையத்திலும் நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தீவிரவாத தாக்குதல்களில், 34 பேர் கொல்லப்பட்டதுடன், 250 பேர் படுகாயமடைந்தனர்.
எத்தகைய தீவிரவாத தாக்குதலையும் எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணி முகாமையான தெரிவித்துள்ளார்.