மேலும்

மின்சார நெருக்கடியை தவிர்க்க சம்பூர் அனல்மின் திட்டம் துரிதப்படுத்தப்படும்- சிறிலங்கா அரசாங்கம்

ranjith siyambalapitiyaசம்பூர் அனல்மின் திட்டத்தை துரிதப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முற்படும் என்று சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறிலங்காவில் ஏற்பட்ட மின்சாரத் தடை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மோசமான மின்சார நெருக்கடிய தவிர்க்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, சம்பூர் அனல் மின் திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையம் திடீரெனச் செயற்படாமல் நின்று போனதும்,  மின்சார நெருக்கடிக்கு ஒரு காரணம் என்றும், இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான சில பரிந்துரைகளையும், திட்டங்களையும் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *