மேலும்

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்

mangayarkarasi-amirthalingamதமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவியும், 1960களில் நடந்த சத்தியாக்கிரக போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவருமான மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் (வயது 82) நேற்றுமாலை லண்டனில் காலமானார்.

லண்டனில் வசித்து வந்த, மங்கையர்க்கரசி நேற்றுமுன்தினம் கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமாலை காலமானார்.

தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, அமிர்தலிங்கத்தை மணந்த மங்கையர்க்கரசி, அரசியல் நடவடிக்கைகளில் பங்குபெற்றதுடன், 1960 ஆண்டு நடந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்திலும் பங்கேற்றார்.

இதன் போது சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.

இலங்கைத் தமிழர் அரசியலில் தனது கணவரின் செயற்பாடுகளுக்கு துணை நின்ற மங்கையர்க்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும், தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.

காலஞ்சென்ற மங்கையர்க்கரசியின் இறுதிச் சடங்கு லண்டனில் எதிர்வரும் 20ம் நாள் நடைபெறும் என்று அவரது மகன் பகீரதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *