நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு அங்கீகாரம்
புதிய அரசியலமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இணக்கம் தெரிவித்தன.
இதனால் வாக்கெடுப்பின்றியே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.