மேலும்

தையிட்டியில் இரகசிய வதைமுகாம்

hszசிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களின் 701 ஏக்கர் காணிகள் கடந்த 29ஆம் நாள் சிறிலங்கா படையினரால் விடுவிக்கப்பட்டன.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரைக்கு கீழ்ப் புறம், முள்ளுக்கம்பிகளால், வேயப்பட்டுள்ளது.

தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தப்பிச் செல்வதை தடுக்கவே இவ்வாறான முட்கம்பிக் கூரைகளை சிறிலங்காப் படையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இது போன்றதொரு, வதைமுகாம், வரணியில் 52ஆவது டிவிசன் படையினர் நிலைகொண்டிருந்த காணிகள் விடுவிக்கப்பட்ட போதும், கண்டுபிடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *