மேலும்

மாதம்: December 2015

சம்பந்தனுடன் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்கிறார் விக்கி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கொழும்பில் நடத்திய பேச்சுக்களின் மூலம், இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினுள் நுழைய சரத் பொன்சேகா பகீரத பிரயத்தனம் – கிறீன் கார்ட்டை புதுப்பிக்க விண்ணப்பம்

அமெரிக்கா செல்வதற்கு நுழைவிசைவு மறுக்கப்பட்ட நிலையில், வதிவிடஉரிமை (கிறீன் காட்) அட்டைக்கு சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீள விண்ணப்பித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ள இப்போதே தயாராகிறதாம் சிறிலங்கா அரசாங்கம்

அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளக் கூடிய வகையில், இப்போதே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பரணகம ஆணைக்குழு கலைக்கப்படுகிறது? – காணாமற்போனோர் விவகாரத்துக்கு புதிய அமைச்சு

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு வரும் பெப்ரவரி மாதத்துடன் கலைக்கப்பட்டு, இந்த விவகாரங்களைக் கையாள்வதற்கான புதிய அமைச்சு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றத் தவறியுள்ளது சிறிலங்கா அரசு – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளை போர்க்குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக, குற்றம்சாட்டியுள்ளார், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய  கம்மன்பில.

எல்லா விடயங்கள் குறித்தும் முதலமைச்சருடன் பேசினோம் – சம்பந்தன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுகிறார் சம்பந்தன் – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுவதாக, அவருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் மூலம் தெரியவந்திருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சம்பந்தன் – விக்னேஸ்வரன் சந்திப்பு – 3 மணிநேரம் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று மாலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரியில் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம் – அதிரடிக்குத் தயாராகிறார் மைத்திரி

சிறிலங்காவின் அமைச்சரவை வரும் ஜனவரி மாத முற்பகுதியில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இரா.சம்பந்தன், கவீந்திரனும் இணைத் தலைவர்களாக நியமனம்

வடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களினதும், ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.