மேலும்

எல்லா விடயங்கள் குறித்தும் முதலமைச்சருடன் பேசினோம் – சம்பந்தன்

sampanthanவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட சந்திப்புத் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்-

”வடக்கு மாகாண முதலமைசச்சரை சந்தித்து பேசியுள்ளோம். பேச வேண்டிய எல்லா விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தோம்.

இந்தப் பேச்சுக்கள், சுமுகமாகவும், சிநேகபூர்வமாகவும் நடைபெற்றிருந்தது.

எம்மால் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே எடுக்கப்படும்”  என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *