மேலும்

இரா.சம்பந்தன், கவீந்திரனும் இணைத் தலைவர்களாக நியமனம்

sampanthan-rவடக்கு, கிழக்கின் எட்டு மாவட்டங்களினதும், ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தகவல் வெளியிடுகையில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக இரா.சம்பந்தனும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கவீந்திரன் கோடீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

முன்னதாக, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிறீநேசனும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக மாவை சேனாதிராசாவும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சிவமோகனும், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சாள்ஸ் நிர்மலநாதனும் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுக்கான நியமனங்கள் மட்டும் தற்போது அறி்விக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *