மேலும்

நாள்: 18th December 2015

நியூசிலாந்து பிரதமர் சிறிலங்கா வருகிறார்

நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்து சம்பிக்கவுடன் அமெரிக்கத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை வரைவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச் செயலரும் சிறிலங்கா வந்துள்ளார்

அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தில் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிரதி உதவிச் செயலராகப் பணியாற்றும், கலாநிதி அமி சீரைட் என்ற உயர்மட்ட அதிகாரி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

மடுவில் கண்ணிவெடி அகற்றினார் மங்கள – ஒட்டாவா உடன்பாட்டில் கையெழுத்திட இணக்கம்

போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.

ஒரு அங்குல காணி கூட சீனாவுக்கு உரிமையாக வழங்கப்படாது – சிறிலங்கா அரசு திட்டவட்டம்

சீனாவுக்கு ஒரு அங்குல காணியேனும் உரிமையாக வழங்கப்படாது என்றும், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜதந்திரிகள் சிறிலங்காவுக்கு படையெடுப்பது ஏன்? – பீரிஸ் கேள்வி

சிறிலங்காவுக்கு படையெடுக்கும் அமெரிக்க இராஜதந்திரிகள் குறித்து, சந்தேகம் வெளியிட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிஸ் , நாடு தற்போது அமெரிக்காவுக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு பெண்களை தற்கொலைக் குண்டுதாரிகளாக்கியது பிரதான அரசியல் கட்சிகளே – டிலால் பெரெரா

சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த காலங்களில் பிரிந்து நின்ற கயிறிழுத்துக் கொண்டிருந்ததால் தேசிய பிரச்சினைக்கு தீர்வை காண முடியாது போனது என்று தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா.