மேலும்

மாதம்: December 2015

போர்க்குற்ற விசாரணை சிறிலங்கா இராணுவத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதா?

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

தத்தளிக்கும் சென்னை – தவிக்கும் மக்கள் (படங்கள்)

பெருமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.

ஊடகங்களையும் முடக்கியது சென்னைப் பெருவெள்ளம்

சென்னையில் ஏற்பட்டள்ள பெருவெள்ளத்தினால், இந்தியாவின் பழம்பெரும் நாளிதழான ‘தி ஹிந்து’ 137 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று வெளிவரவில்லை. அத்துடன் ஜெயா மற்றும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிகளும் சேவையை நிறுத்தியுள்ளன.

சென்னை வெள்ளத்தில் ஈழத்தமிழர்களும் அந்தரிப்பு

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கொட்டி வரும் பெருமழை மற்றும் வெள்ளத்தினால், ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை – இலட்சக்கணக்கான மக்கள் தவிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள் – சென்னை விமான நிலைய காட்சிகள்

சென்னையில் கொட்டிவரும் பெருமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் விமானங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.

மூன்றில் இரண்டு ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலஅரசுக்கு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தியத் தளபதி வராததால், அமைதிப்படையினரின் நினைவிடத்தில் துணைத்தூதுவர் அஞ்சலி

இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மட்டும் பங்குபற்றினார்.

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொண்டாலே நல்லிணக்கம் சாத்தியம் – சந்திரிகா

கடந்தகாலத் தவறுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்ளாமல், நல்லிணக்கம் சாத்தியப்படாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.