தத்தளிக்கும் சென்னை – தவிக்கும் மக்கள் (படங்கள்)
பெருமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், இடம்பெயர்ந்த மக்களும், உயரமான கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களும் அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.
உணவு, குடிநீர், மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை மக்கள் தவித்து வருகின்றனர்.