மேலும்

ஐ.நா- சிறிலங்கா இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாம் – மைத்திரிபால சிறிசேன கூறுகிறார்

ms-undp-metஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று ஐ.நா அபிவிருத்தித் திட்ட அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபை அமர்வுக்காகச் சென்றிருந்த போது, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் தாம் நடத்திய பேச்சுக்களின் மூலமே, ஐ.நாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் பலமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில், சிறிலங்காவுக்குத் தேவையான குடிநீர்த் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

ms-undp-met

தாம் குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் சிறிலங்கா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு ஐ.நா அபிவிருத்தித்திட்டத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *