மேலும்

சுவிசில் இன்று ‘கி.பி.அரவிந்தன்- ஒரு கனவின் மீதி’ நூல் அறிமுக நிகழ்வு

ki-pi-kanavin-meethi-bookஈழப் போராட்ட முன்னோடியும், கவிஞரும், எழுத்தாளரும், ஊடகவியலாளருமான கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவை ஒட்டி அவரது நண்பர்கள், தோழர்களால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூலான ‘கி.பி.அரவிந்தன் – ஒரு கனவின் மீதி’ அறிமுக நிகழ்வு இன்று சுவிற்சர்லாந்தின் பேர்ண் நகரில் நடைபெறவுள்ளது.

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் அமைந்துள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலய மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர் சண் தவராஜா தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் நூலின் தொகுப்பாசிரியர்களுள் ஒருவரும் முற்போக்குக் கவிஞருமான தோழர் பா.செயப்பிரகாசம் சிறப்புரை வழங்குவார்.

நூல் அறிமுகவுரையை இலக்கியவாதி நயினை சிறி அவர்களும், கி.பி. அரவிந்தனின் அரசியல் சிந்தனைகள் தொடர்பில் அரங்கச் செயற்பாட்டாளர் திருமதி சிவாஜினி தேவராஜா அவர்களும் உரையாற்றுவர்.

நிகழ்வில் தோழர் பா.செயப்பிரகாசம் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *