ஐ.நா அறிக்கையை வரவேற்கிறது பிரித்தானியா
சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானியா, இந்த அறிக்கையின் பரிந்துரைகளை உன்னிப்பாக ஆராயப் போவதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியா வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர்,
“இந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்காவுடனும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஏனைய பங்காளர்களுடனும், இணைந்து பணியாற்றுவதற்கு பிரித்தானியா எதிர்பார்க்கிறது.
கடந்தகால விவகாரங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சிறிலங்காவில் நிலையான அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கும், உதவும் வகையில் இணக்கப்பாட்டுத் தீர்மானம் ஒன்றை கொண்டு வர முடியும் என்று நம்புகிறோம்.
இந்த முக்கியமான அறிக்கை வெளியிடப்பட்டதை வரவேற்பதுடன், இதற்காகப் பணியாற்றிய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் பணியாளர்களையும் மதிக்கிறோம்.
ஐ.நாவின் விசாரணைக்காக பிரித்தானியா கடுமையாக வாதிட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.