ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர முயற்சிக்கிறாராம் ரணில்- இந்தியாவிடம் வாக்குறுதி
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது குறித்து தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றையாட்சிக்குள்- எமது அரசியலமைப்புக்குள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கலாம் என்று ஆராய்ந்து வருகிறோம்.” என்றும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
மேலும், ஜெனிவாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும் தாம் எடுத்து விளக்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.