சிறிலங்கா விவகாரம் குறித்து ஜப்பானில் பேச்சு நடத்துகிறார் ரமபோசா- கட்டுநாயக்க வந்து சென்றார்
ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க பிரதி அதிபர் சிறில் ரமபோசா இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறிது நேரம் தங்கிச் சென்றுள்ளார்.
தென்னாபிரிக்க பிரதி அதிபர் சிறில் ரமபோசா தலைமையிலான குழுவினர் பயணம் செய்த விமானம், ஜப்பான் செல்லும் வழியில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.
சிறிது நேரம் தரித்து நின்று விட்டு, சிறில் ரமபோசா குழுவினர் ஜப்பான் சென்றுள்ளனர்.
ஜப்பானில் அவர், சிறிலங்காவுக்கான ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூஷி அகாஷியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்பும் முயற்சிகள், புனர்வாழ்வு, புனரமைப்பு குறித்தே அவர் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
சிறில் ரமபோசாவை சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக கடந்த ஆண்டில், தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா நியமித்திருந்தார்.
அத்துடன், அவர் சிறிலங்கா வந்து பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.