தேசிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய குழு அங்கீகாரம்
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று அங்கீகாரம் அளித்துள்ளதாக, கட்சியின பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்ற காலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்த மத்திய குழுக் கூட்டத்திலேயே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா,சரத் அமுனுகம, சுசில் பிரேமஜெயந்த, எஸ்.பி.திசநாயக்க, மகிந்த சமரசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும், துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.