மேலும்

கொலையும் செய்வோம் – மைத்திரியை மிரட்டும் மகிந்தவின் விசுவாசி

Janaka Bandara Tennakoonபதவியில் இருந்து நீக்கப்பட்ட அனுர பிரியதர்சன யாப்பாவையும், சுசில் பிரேமஜெயந்தவையும், மீண்டும் அதே பதவிகளில் அமர்த்தாவிடின் தாம் கொலை செய்யவும் அஞ்சப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மிரட்டியுள்ளார் மகிந்தவின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்.

தம்புள்ளவில் நேற்றுமாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,’ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் சுசில் பிரேமஜயந்தவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவையும், உடனடியாக மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும்.

இவர்களை நீக்க சிறிலங்கா அதிபர் எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் இருவரையும் மீண்டும் பதவியில் அமர்த்தாவிடின், ஐதேகவின்  திட்டத்தை தோற்கடிக்க திட்டம் ‘பி’ யை பயன்படுத்த நேரிடும்.

நாங்கள் மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் இருக்கின்றோம். கொலை செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *