மேலும்

மாதம்: April 2015

சிறிலங்காவில் 10 ஆயிரம் ஆண்டுக்கு முந்திய இளம்பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள புலத்சிங்கள, பஹியங்கல பகுதியில் மீட்கப்பட்ட ஆதிகால மனித எலும்புக்கூடு, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய, இளம்பெண் ஒருவருடையது என்று, பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்லைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாட்டை ஒன்றுபடுத்தும் வாய்ப்பை சிறிலங்கா தவறவிட்டு விட்டது – அமெரிக்க உயர் அதிகாரி

முப்பதாண்டுகாலப் போருக்குப் பின்னர், 2009ம் ஆண்டு நாட்டை ஒன்றுபடுத்தக் கிடைத்த வாய்ப்புகளை சிறிலங்கா பயன்படுத்திக் கொள்ளத் தவறியுள்ளதாகவும், இதனால், நல்லிணக்கத்தை அடைவதற்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் கூட்டமைப்பும் இறங்கியது

வடக்கு கடற்பரப்பில், மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து, நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி

சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.

வடக்கில் இருந்து படையினரையோ, முகாம்களையோ அகற்றமாட்டோம் – சிறிலங்கா இராணுவத் தளபதி

தனியார் காணிகளை ஒப்படைப்பதற்காக, வடக்கில் இருந்து  படையினரையோ முகாம்களையோ அகற்றவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்தவை விடவும் சீனாவுக்கு வேண்டியவராகிவிட்ட மைத்திரி – உபுல் ஜோசப் பெர்னான்டோ

சீனா தற்போது மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது. சீனாவுக்கான அவரது பயணத்தைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவைவை விட மைத்திரிபால சிறிசேன தனக்கு மிகவும் வேண்டியவர் என்பதை சீனா உணர்ந்துள்ளது.

சிகிரியாவில் பெயர் பொறித்த மட்டக்களப்பு பெண்ணுக்கு பொதுமன்னிப்பு – ஆணையிட்டார் மைத்திரி

சிகிரியாவில் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, புராதன சின்னத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தம்புள்ள நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்குகிறது சீனா

சீனாவினால் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்ட பின்னரும், சிறிலங்காவுக்கு ஒரு பில்லியன் டொலர் மானியக் கொடைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் – இரவெல்லாம் தூக்கமின்றித் தவிக்கும் சபாநாயகர் சமல் ராஜபக்ச

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்க முடியாமல், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சமல் ராஜபக்ச இரவெல்லாம் தூக்கமின்றி தவிப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா, சீனா, சிறிலங்கா இடையே முத்தரப்பு பேச்சுக்கு சீன அதிபர் யோசனை

பிராந்திய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா, சிறிலங்கா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து முத்தரப்பு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று, சீனா திட்டமொன்றை முன்மொழிந்துள்ளது.