சீனாவுடனான உறவுகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா அமைச்சர் உறுதி
சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் காசிம், உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீன பதில் தூதுவர், ரென் பக்கியாங்கை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
சுமுகமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, சீனாவுடனான சிறிலங்காவின் உறவுகளில் மாற்றம் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன், எல்லாத் திட்டங்களும் மீளாய்வு செய்யப்படுவதாகவும், இந்த திட்டங்களை தாமதமின்றி தொடர்வதை தமது அமைச்சு உறுதிப்படுத்தும் என்றும் அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.