மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார் மகன் யோசித
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து, அவரது மகனான லெப்.யோசித ராஜபக்ச நீக்கப்பட்டு, சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் இந்திக சில்வா,
“தனது தந்தையின் பாதுகாப்பு அணியில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, லெப்.யோசித ராஜபக்ச கடந்த பெப்ரவரி 12ம் நாள் விடுத்த வேண்டுகாளை அடுத்து, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில், சில நாட்களுக்கு முன்னர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
தற்போது வரும், 9ம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்படையின் தேவைகளின் நிமித்தம் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.