மேலும்

Archives

மோடி, சுஸ்மாவுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் முக்கிய பேச்சு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றிரவு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலர், கொமன்வெல்த் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக்காலை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவினால் சிறிலங்கா கடற்படைக்கு பயிற்சி

அமெரிக்க இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவினால், சிறிலங்கா கடற்படையினருக்கு திருகோணமலையில் வைத்து சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பயிற்சித் திட்டத்தின் கீழ் பலன்ஸ் ஸ்ரைல் 2017/1 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா படைகளுக்கு கருவிகள், தொழில்நுட்பங்களை வழங்க அமெரிக்கா இணக்கம்

சிறிலங்காவில் அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை  மீளக் கட்டியெழுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினருக்கு, அமெரிக்கா ஆதரவையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம்

ஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்

வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 உலோகப் பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது அமைப்புக்கள் எதிர்த்துள்ளன. இந்த வீடுகள் தமக்கு வேண்டாம் என மக்கள் கூறிவரும் நிலையில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஹெய்டியில் சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – பகுதி -2

‘மாலியில் பணியாற்றுவதற்காக எமது வீரர்கள் அழைக்கப்பட்டமையானது அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது’ என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்சா டீ சில்வா தெரிவித்தார்.

பத்தேகமவில் வீழ்ந்த உலங்குவானூர்தியை மீட்டது சிறிலங்கா விமானப்படை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்த எம்.ஐ-17 உலங்குவானூர்தி சிறிலங்கா விமானப்படையினரால் மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.

உதவிப் பொருட்களுடன் கொழும்பு வந்தது சீன விமானம்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீன விமானம் ஒன்று நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.