மேலும்

பத்தேகமவில் வீழ்ந்த உலங்குவானூர்தியை மீட்டது சிறிலங்கா விமானப்படை

mi-17-dammaged (1)வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்த போது காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்த எம்.ஐ-17 உலங்குவானூர்தி சிறிலங்கா விமானப்படையினரால் மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை காலையில் பறந்து கொண்டிருந்த போது, எம்.ஐ-17 உலங்குவானூர்தியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானி அதனை மரங்கள் நிறைந்த பகுதி ஒன்றில் தரையிறக்கினார்.

இதன்போது வீடு ஒன்று சேதமடைந்ததுடன், மரங்களுக்கு நடுவேயும், வெள்ளத்திலும் சிக்கி உலங்குவானூர்தி பலத்த சேதமடைந்தது.

mi-17-dammaged (1)

mi-17-dammaged (2)

வெள்ளம் வடிந்ததையடுத்து, சிறிலங்கா விமானப்படையினர் அங்கு சென்று, உலங்கு வானூர்தியின் சேதமடைந்த வால்பகுதியை அறுத்து துண்டாக்கினர். அத்துடன் காற்றாடிகள் மற்றும் முக்கியமான பாகங்கள் அதில் இருந்து அகற்றப்பட்டன.

இதன் பின்னர், விமானப்படையினர் நேற்று உலங்குவானூர்தியை கனரக பாரஊர்தி மூலம் மீட்டு கொக்கல விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *