இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கடந்த மாதம் 22 ஆம் நாள் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட ரவி கருணாநாயக்க தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இன்று இந்தியாவுக்கு மேற்கொண்டார்.
இன்று மாலை அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
நாளையும் அவர் புதுடெல்லியில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.