மகிந்தவை ஆதரிக்கும் அதிகாரிகள் மீது வெளிநாட்டு பயணத்தடை – எதிரணியின் கிடுக்கிப்பிடி
தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்க மற்றும் இராணுவ, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.