மேலும்

Tag Archives: ஈழத்தமிழர் சினிமா

உயிர்த்தெழும் சாட்சியங்கள்! – டி.அருள் எழிலன்

தங்களின் வரலாற்று வலியை, இன அழிப்பின் வேதனையை வலிமிகுந்த சினிமாவாகப் பதிவுசெய்ய ஆரம்பித்திருக்கிறார்கள், உலகம் முழுக்க உள்ள ஈழத் தமிழர்கள். போர் தந்த துயரங்களை லண்டன், பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, ஜெர்மனி… போன்ற நாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறை, திரைப்படங்கள் மூலம் பேசுவதால் மேற்கு உலக நாடுகளில் ஈழ சினிமா வேர்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.