ஹெய்டியில் சிறிலங்கா படைகள் நிறுத்தப்படுவதை எதிர்க்கும் மனித உரிமை அமைப்புகள்
தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
தண்டிக்கப்படாத பாலியல் துஷ்பிரயோகத்தைக் காரணம் காட்டி, ஹெய்டியில் சிறிலங்காப் படைகளை நிலைநிறுத்துவதை நிறுத்துமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றிய போது, அல் குவைடா தீவிரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளின் சடலங்களும் ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன.
ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அமைதிப்படைக்கு படையினரைச் சேர்த்துக் கொள்ளும் போது, சிறிலங்கா படையினருக்கு கையாளப்படும் வழிமுறைகள் ஏனைய நாடுகளின் படையினரை சேர்க்கும் போதும் கையாளப்படும் என்றும், அவர்கள் தமது நாடுகளில் எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இணைந்து கொள்வதற்காக 200 சிறிலங்கா இராணுவத்தினர் அடுத்த மாதம், கொழும்பில் இருந்து புறப்படவுள்ளனர்.
ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை முதல்முறையாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், இதற்காக 864.08 மில்லியன் ரூபா செலவிலான பாதுகாப்புத் தளபாடங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.