மேலும்

பிரிகேடியர் பிரியங்கவை சீனாவுக்கு அனுப்புகிறது சிறிலங்கா

Brigadier priyanga fernandoபிரித்தானியாவில் இருந்து கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பயிற்சிக்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

லண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை சைகை காண்பித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கடந்தவாரம் கொழும்புக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.

அவர் மீண்டும் பிரித்தானியா செல்லமாட்டார் என்றும் அவரது பணிக்காலம் முடிந்து விட்டது என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியிருந்தார்.

இந்தநிலையில், சீனாவில் மேலதிக கற்கைநெறி ஒன்றுக்காக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பயணமாகவுள்ளார்.

5 மாதகால கற்கைநெறிக்காக அவர் வரும் மார்ச் 2ஆம் நாள் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *