மேலும்

அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

அவசரகாலச் சட்டத்தை மேலும்  நீடிக்கும் பிரேரணை 100 மேலதிக வாக்குகளால் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்பை கோரியதன் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 108 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆகியவற்றின் 8 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, உறுப்பினர்கள் மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 108 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் இருக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *