மேலும்

Tag Archives: தமிழ் அரசுக் கட்சி

கிளிநொச்சி போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ‘கறுப்புச் சட்டைக்காரர்கள்’

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில், கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்த சிலர் குழப்பம் விளைவித்தனர்.

புதிய கட்சியைத் தொடங்கினார் அனந்தி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு, வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட  அனந்தி சசிதரன் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

விக்னேஸ்வரன் – கூட்டமைப்பு இடையே தொடங்கியது மோதல்

வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், வடக்கு மாகாண முதலமைச்சரும் ஏட்டிக்குப் போட்டியான, விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யவில்லை – சிறீதரன்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா போட்டியிட வேண்டும் என்பதே, தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் போராளி விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் போராளியை விசாரணைக்கு வருமாறு, சிறிலங்காவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அழைப்பாணை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாநகர முதல்வராகிறார் சரவணபவன்

மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தியாகராசா சரவணபவனை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் – மன்னாரில் 5 சபைகளுக்கு 11 கட்சிகள், 1 சுயேட்சைக் குழு போட்டி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்,  மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

உள்ளூராட்சித் தேர்தலுக்கு மாவட்ட முகவர்களை நியமித்தது தமிழ் அரசுக் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.

இணக்கப்பாடு இல்லாவிடின் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் முடிவு செய்துள்ளது.