மேலும்

செம்மணி புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் 209 ஆக அதிகரிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 209 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 39 ஆவது நாள் அகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்ட போது, புதிதாக 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 209 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இதையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *