மேலும்

செம்மணியில் இன்றும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து, இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வின் 36ஆவது நாள் அகழ்வு இன்று யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது, புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து இதுவரை அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 177 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இனங்காணப்பட்ட 6 மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்ந்தெடுக்கப்பட்டன. இதனையடுத்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 164 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *