மேலும்

நாள்: 28th December 2019

பொதுத் தேர்தல் ஆசன ஒதுக்கீடு – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்குள் இழுபறி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன – மருத்துவமனையில் விளக்கமறியல்

வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு வருகிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை நாடு திரும்ப உத்தரவு

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் – துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை ஜனவரி 15ஆம் நாளுக்கு முன்னதாக, நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜித தொடர்ந்தும் மருத்துவமனையில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.