ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கு சிறிலங்கா அதிபர் எச்சரிக்கை
2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
2015 தோல்வியிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவில்லை என்றால், 2019 நொவம்பர் வெற்றியைத் தக்கவைக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களின் அனுமதியுடனேயே, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வெள்ளை வான் கடத்தல்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் என, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் ஆசனங்களைக் பங்கீடு செய்து கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்களில் முடிவுகள் எட்டப்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சிங்கள-பௌத்த தேசத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்தால், வடக்கு -கிழக்கில் வாக்களிப்பு நடத்தக் கூடாது என்று ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.
வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ், எதிர்வரும் ஜனவரி 14ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் – துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களை ஜனவரி 15ஆம் நாளுக்கு முன்னதாக, நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் இம்முறை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்றும், சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளது.