மேலும்

விரல் நுனியில் குடிமக்களின் அனைத்து தரவுகளும் – கோத்தாவின் புதிய திட்டம்

சிறிலங்காவின் அனைத்துக் குடிமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

அதிபர் செயலகத்தில் இன்று  தகவல் மற்றும் ஊடக தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“குடிமக்கள் தொடர்பான, தேவையான அனைத்து தரவுகளையும்  திரட்டுவது செலவுமிக்கதாக இருந்தாலும், நேரத்தை மிச்சப்படுத்தும்.

பல்வேறு திணைக்களங்களில் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் அவற்றை சேகரித்து வைத்திருந்தால், நிறைவான பொதுச் சேவையை வழங்க முடியும்.

இதன் மூலம் பொய்யான அல்லது, பொருத்தமில்லாத தகவல்கள் பரிமாறப்படுவதையும் தடுக்க முடியும்.” என்றும் சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *