மேலும்

ராஜித சேனநாயக்க பிணையில் விடுவிப்பு

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, பிணை வழங்கி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது செய்யப்பட்ட  ராஜித சேனாரத்னவை  இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று அவரது வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ராஜித சேனாரத்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இருவரின் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர், ராஜித சேனாரத்னவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறும், குற்ற விசாரணைத் திணைக்களத்தினருக்கு நீதிவான் பணித்தார்.

அதேவேளை, ராஜித சேனாரத்ன வெளிநாடு செல்வதற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *