வடக்கு ஆளுநராக பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமனம்
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர், சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கடந்த மாதம் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சுகாதார அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவரை வடக்கு மாகாண ஆளுநராக சிறிலங்கா அதிபர் இன்று நியமித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள முதல் பெண் ஆளுநர் இவராவார்.