மேலும்

நாள்: 24th December 2019

சிறிலங்கா பிரதமருடன் இந்திய கடற்படைத் தளபதி  பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தமிழில் தேசிய கீதத்துக்கு தடை

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் இம்முறை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்றும், சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என்றும் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிணையில் விடுதலையானார் சம்பிக்க ரணவக்க

ராஜகிரிய பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சற்று முன்னர் பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.