மேலும்

மாதம்: November 2019

எம்சிசி உடன்பாடு கையெழுத்திடப்படுவது சந்தேகமே – அமெரிக்க அதிகாரி

சிறிலங்காவில் எம்சிசி உடன்பாடு குறித்து பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது என்று, மிலேனியம் சவால் நிறுவனத்தின் சிறிலங்காவுக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் தெரிவித்துள்ளார்.

சந்திரிகாவை வெளியேற்ற அவசரமாக மத்திய குழுவை கூட்டுகிறார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் காப்பாளராக உள்ள, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை கடற்படைத் தளத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேரும், கடைசியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த திருகோணமலை கடற்படைத் தளத்தில் விசாரணைகளை நடத்துவதற்கு,  குற்ற விசாரணைப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பின்கதவால் நாடாளுமன்றம் நுழைகிறார்  மைத்திரி?

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்சிசி உடன்பாட்டை பகிரங்கப்படுத்தினார் மங்கள – மகிந்தவுக்கும் சவால்

அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ள மிலேனியம் சவால் உடன்பாட்டின் வரைவை சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

எம்சிசிக்கு எதிராக பேராயரின் போலி அறிக்கை – கோத்தா தரப்பின் வேலை?

அமெரிக்காவுடன், எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் கடித தலைப்பில், போலியான அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் உலாவ விடப்பட்டுள்ளது.

எம்சிசி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம் – அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்துடன் கையெழுத்திடப்படும்,  மிலேனியம் சவால்  உடன்பாட்டுக்கு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

18 வீத நிலங்கள் அமெரிக்கா வசமாகும் – எச்சரிக்கிறார் வீரவன்ச

மிலேனியம் சவால் உடன்பாட்டில், அமெரிக்காவுடன் இரகசியமாக கையெழுத்திடுவதற்கு  அலரி மாளிகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எம்சிசி உடன்பாடு ஆட்சி மாற்றத்துக்குப் பின் செல்லாது – கம்மன்பில

தற்போதைய அரசாங்கம், இரகசியமான முறையில்,  மிலேனியம் சவால் உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், ஆட்சி மாற்றத்துக்குப்  பின்னர் அந்த உடன்பாடு செல்லுபடியற்றதாகவே கருதப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றில் மனு

அமெரிக்காவுடன் எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.