அமெரிக்காவுடனான உடன்பாடுகளுக்கு தடை கோரி உச்சநீதிமன்றில் மனு
அமெரிக்காவுடன் எம்சிசி, சோபா, அக்சா உடன்பாடுகளை செய்து கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவாளர் தர்சன வீரதுவாகே என்பவரே நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக, பிரதமர், நிதி அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், சட்டமா அதிபர், வெளிவிவகார அமைச்சர், ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள எம்சிசி உடன்பாட்டின் உள்ளடக்கங்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு , குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு நலன்களுக்கு மிகவும் கவலை அளிக்கக் கூடியது என்று மனுதாரர் கூறியுள்ளார்.